Wednesday 14 March 2012

மெல்ல மெல்லப் பணம்- 1

அன்பு நண்பர்களே நாம் அன்றாடம் நிறைய விசயங்களைப் பற்றிப்  பேசுகிறோம், அதில் எத்தனை விஷயங்கள் நம் வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது என்பது கேள்விக்குறி தான்.
இன்று நான், நம் அனைவருக்கும் பிரயோசனமான உரையாடலை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
செலவுகள் நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை வாசி உயர்வினை கட்டுக்குள் வைத்து, செலவு செய்வது, காட்டில் போய் தவம் இருப்பதை விட கடிதான காரியம் ஆகி விட்டது.
இந்த நிலைமையிலும் எப்படி பொருளாதாரத் திட்டமிட்டு , சேமித்து ,முதலீடு செய்து நம் வாழ்வை ஒரு படியாவது முன்னேற்றிக் கொள்ள உதவுவதற்காகவே இந்தப் பதிவு.
சேமிப்பு இல்லாத வீடு கூரை இல்லாத வீட்டிற்கு சமம் என்று சொல்லலாம். நான் என்னதான் கஷ்டப் பட்டு உழைத்தாலும் என்னால் சேமிக்க முடியவில்லை என்று புலம்புகிரீர்களா ? நீங்கள் சேமிக்க வேண்டுமெனில் இரண்டு  வழி தான் உண்டு.                       
                                                   

ஒன்று :
 நீங்கள் கட்டாயம் உங்கள் செலவுகளைக் குறைக்க அல்லது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் .
நாம் செய்கின்ற செலவுகளில் சில சதவீதங்கள் வீணானது அல்லது தேவையற்றது என்கிறது ஒரு ஆய்வு. உதாரணமாக நாம் பயன்படுத்துகின்ற பற்பசையினை 5 % சதவிகிதம் முதல் 10 % வரை இருக்கும்பொழுதே 90 % மக்கள் தூக்கி எரிந்து விடுவதாகச்  சொல்கிறது அந்த ஆய்வு. இது ஒரு மேட்டரா என்கிறீர்களா ?இது தான் நிறைய மக்கள் செய்கின்ற தவறு.
எத்தனை பேர் நாம் நமது சைக்கிள் ,பைக் ,கார்களில் பழுது ஏற்ப்பட்டால் உடனே சரி செய்கிறோம்? பத்து ரூபாயில் சரி செய்ய வேண்டிய ஒரு செலவை நூறு ரூபாய் ஆகும் வரை காலதாமதம் செய்வது, நாம் அனைவரும் செய்கிற ஒரு காரியம் தான் என்பதை மறுக்க இயலாது .
நான் ஒரு ரூபாய் கூட வீணாகச்  செலவு செய்வதே கிடையாது ,அப்படியிருந்தும்என்னால் சேமிக்கக முடியவில்லை என்று புலம்பினால் உங்கள் சேமிப்பை உயர்த்த ஒரே வழி.
இரண்டு :
நீங்கள் உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டாம் ( நீங்கள் தான் ஒரு ரூபாய் கூடவீண்  செலவு செய்வது இல்லையே ) காட்டாயம் நீங்கள் உங்கள் வருமானத்தைதான் இன்னும் பெருக்க வேண்டும்.
ஆம் நண்பர்களே நம் பொருளாதாரத்தில் மேன்மை அடைய ஒன்று நாம் செலவைக் குறைத்து சேமிக்க வேண்டும், செலவு சரியாகச் செய்தும் நம்மால் சேமிக்க முடியாவிட்டால் நம் வருமானத்தை இன்னும் பெருக்க வேண்டும் .இந்த இரண்டைத் தவிர நாம் என்ன செய்தாலும் நாம் பொருளாதார மேம்பாடு அடையவே முடியாது. இது ரெண்டும் செய்ய முடியாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது.அந்த வழி உங்கள எங்கயோ கொண்டு போய்டும். அது என்ன வழியா?படத்த பாருங்க உங்களுக்கே புரியும்.

என்னங்க பணத்த அச்சு அடுச்சு வேணுனா உங்க பொருளாதாரத்த டெவெலப் பண்ணலாம். ஆனால் நான் உங்களுக்கு சொல்லப்போறது நியாயமான மற்றும் சரியான வழியில் எப்படி சேமிக்கலாம் அல்லது நம்ம வருமானத்த உயர்த்தலாம்னு சொல்வதற்காகவே இந்தப் பதிவு.
                                                                                                                                       தொடரும்...   

Monday 2 January 2012

பாடல் விமர்சனம் 2

நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். கண்களை மூடி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தில் பெண்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
கடவுள் முதன் முதலில் ஒரு எலியைப் படைத்தாராம், எலி அங்கும் இங்கும் ஓடி தானியங்களை எல்லாம் நாஸ்தி பண்ணியதாம், கடவுள் பார்த்தாராம், எலியை அடக்க பூனையைப் படைத்தாராம்,  பூனை தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற ஆணவத்தில் எலியைக் கொல்ல, பூனையை அடக்க நாயைப் படைத்தாராம், நாயை தன் கட்டுப் பாட்டில் வைக்க மனிதனைப் படைத்தாராம். மனிதன் அறிவால் கடவுளையே மிஞ்சும் அளவிற்கு ஆணவத்தில் நடக்க, கடவுள், மனிதன் அறிவு மயங்கி, ஒரு போதையோடு அலையத்தான் பெண்ணைப் படைத்தாராம்.
  நான் சொல்றது ரீல்னு நெனைக்காதீங்க, நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான், ஒரு டெஸ்ட் வேணுனா வச்சுப்போமா? வாழ்க்கைல எல்லாருக்கும் முன்னுக்கு வரணுன்னு ஆசை இருக்கு, பிட்சைக்காரன் கூட அடுத்தபடிக்கு முன்னேற ஆசையாத்தான் இருக்கான். சரி சரி டெஸ்ட்க்கு வரேன். உங்ககிட்ட வாழ்க்கையில் முன்னேற டிப்ஸ் தர ஒரு சி டி யும், ஒரு செக்ஸ் பட சி டி யும் இருந்தால் எதை முதலில் நூறு சதவிகிதம் ஆர்வத்தோடு பார்ப்பீர்கள்.  
இந்த கேள்விக்கு மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள், ஒரு அழகான பெண் உங்களை உடலுறவு கொள்ள அழைத்தால் செல்வீர்களா இல்லையா? நீங்கள் திருமணம் ஆனவர் என்றாலும் கூட. 
ஆண் எப்போதும் பெண்ணின் மீது போதையோடு அலைபவன்தான், அதற்கு பெயர் காதல், அன்பு , ஹார்மோன் தூண்டல் என என்ன வேண்டுமானாலும் சொன்னாலும் சரி. கூகுளில் போய் beauty  னு இமேசஸ் தேடுங்க, பொண்ணுங்க படம் தவிர வேறு ஒன்னும் வராது.
அதனால்தான் நாம செரைக்கிற ப்ளேடுக்கு கூட மாடலா பொண்ணுங்க விளம்பரத்துல வாராங்க.
சரி சரி புலம்பாம பாட்டப் பாருங்க, நாம ஆம்பளையா பொறந்துட்டோம் நம்ம தலை எழுத்தை மாத்த முடியுமா?


நெஞ்சை வருடும் திகட்டாத தித்திக்கும் பாடல். பாடலுக்கு இசை  கம்போஸ் செய்த விதம் தேன் என்றால், பாடல் வரிகள் தேனில் விழுந்த பலா.
நம்முடைய தாத்தாக்கள் சில சிவாஜி, எம் ஜி யார் பாடல்களை இன்றும் கேட்கும் போது அடடா என்று வாயைப் பிளப்பார்களே, நமக்கும் வயதாகி இந்தப்பாடலைக் கேட்டாலும், இந்த பாடல் நம்மை வாய் பிளக்க வைக்கும் என்பது சத்தியம்.
பெரும்பாலும் ஆண்கள் பெண்களை நிலா,வானம்,தேன்,மலர் என்றுதான் வர்ணிப்பார்கள் ஆனால் இந்தப் பாடல் அவள் அழகில்லை என்று ஒரு நெகட்டிவ் தோரணையோடு செல்வதும், அதனோடு பெண்ணை வர்ணிப்பதும் அழகோ அழகு. இந்த பாடலைக் கேட்கும் போதோ, பார்க்கும் போதோ பள்ளி, கல்லூரி நாட்களுக்கு, நம் மனம் நம்மையும் அறியாமல் செல்கிறது.
மனதில் காதல் இல்லாத எந்த இசை அமைப்பாளரும் இப்படி ஒரு இசையினைத் தர இயலாது, மற்றுமொரு பாடலில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல் பிரிந்து செல்வது உங்கள் என்றும் இனியவன்.
 புத்தாண்டு வாழ்த்துக்கள்.